முல்லைத்தீவில் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த பெரும் துயரம்!!

ஆசிரியையின் த.காத உ.றவால் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த துயரம்!

முல்லைத்தீவு – விசுவமடு பிரதேசத்தில் ஆசிரியை ஒருவரின் க.ள்ள கா.தலனால் பாடசாலை மாணவி ஒருவர் பா.லி.யல் து.ஷ்பி.ரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து சந்தேக நபர் கடந்த (19-02-23) புதுக்குடியிருப்புப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை ஆசிரியை கணவரை விட்டுப்பிரிந்து தனித்து வசித்து வரும் நிலையில் வேறு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருடன் த.காத உறவை பேணி வந்ததுடன், இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் பா.திக்கப்பட்ட மாணவி கல்வி விடயம் தொடர்பாக ஆசிரியையின் வீட்டுக்குச் சென்ற போது மாணவி பா.லி.யல் ரீ.தியாக து.ன்பு.றுத்தப்பட்டுள்ளார். சம்பவத்தின் போது ஆசிரியை வீட்டில் இருக்கவில்லை என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பா.திக்கப்பட்ட மாணவி பெற்றோரிடம் கூறியதையடுத்து அவர்கள் பொலிஸில் முறைப்பாடு அளித்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரை (20-02-23) அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.